ETV Bharat / bharat

பாஜக எம்எல்ஏ ராஜா சிங்குக்கு எதிராகப்போராட்டம்.. ஹைதராபாத்தில் ஊரடங்கு சட்டம் அமல்..

பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கிங்கிற்கு எதிராக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத்தொடர்ந்து பழைய நகரில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

author img

By

Published : Aug 25, 2022, 3:37 PM IST

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்(தெலங்கானா): பாஜக எம்எல்ஏ ராஜா சிங், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியதைத்தொடர்ந்து, போலீசார் அவரை கடந்த ஆக.23ஆம் தேதி கைது செய்தனர்.

இதனிடையே பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஹைதராபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பதற்றமான இடங்களான மீர் சௌக், சார்மினார், கோஷாமஹால் ஆகிய இடங்களில் விரைவு அதிரடிப்படையினரும் 360 ஆர்பிஎஃப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பரபரப்பான பகுதிகளான சந்திராயண குட்டா, சார்மினார், யாகுத்புரா, பகதூர்புரா, ஃபலக் நுமா, ஷாலிபண்டா மற்றும் மொகல்புரா, தலாப் கட்டா, ரீன் பஜார் உள்ளிட்டப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனிடையெ நேற்று (ஆக.24) ராஜா சிங்கின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷாலிபண்டா மற்றும் சைதாபாத் பகுதிகளில் காவல் துறையின் எச்சரிக்கையையும் மீறி சில போராட்டக்காரர்கள் நள்ளிரவில் சாலைகளில் இறங்கியபோது, ​​போலீசார் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக, சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். அவ்வப்போது சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. போராட்டங்கள் தீவிரமடைந்ததைத்தொடர்ந்து, ஹைதராபாத்தின் பழைய நகரில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகளைப்பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும்; நகர மக்கள் ஒத்துழைக்கவேண்டும் எனவும் போலீசார் தரப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் மெஹ்மூத் அலி, 'அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு சமரசமற்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசி கலவரத்தை ஏற்படுத்த நினைத்தால், பொறுத்துக்கொள்ள முடியாது. ராஜாசிங் மீதான புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தில் சாதி, மதம், இனம் உள்ளிட்ட எந்த பேதமும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப்பேசி வீடியோ வெளியிட்டப்புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை, தெலங்கானா மாநில பாஜக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை வீடியோ... கைதான பாஜக எம்எல்ஏ ராஜா சிங்... கட்சியில் சஸ்பெண்ட்

ஹைதராபாத்(தெலங்கானா): பாஜக எம்எல்ஏ ராஜா சிங், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியதைத்தொடர்ந்து, போலீசார் அவரை கடந்த ஆக.23ஆம் தேதி கைது செய்தனர்.

இதனிடையே பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஹைதராபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பதற்றமான இடங்களான மீர் சௌக், சார்மினார், கோஷாமஹால் ஆகிய இடங்களில் விரைவு அதிரடிப்படையினரும் 360 ஆர்பிஎஃப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பரபரப்பான பகுதிகளான சந்திராயண குட்டா, சார்மினார், யாகுத்புரா, பகதூர்புரா, ஃபலக் நுமா, ஷாலிபண்டா மற்றும் மொகல்புரா, தலாப் கட்டா, ரீன் பஜார் உள்ளிட்டப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனிடையெ நேற்று (ஆக.24) ராஜா சிங்கின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷாலிபண்டா மற்றும் சைதாபாத் பகுதிகளில் காவல் துறையின் எச்சரிக்கையையும் மீறி சில போராட்டக்காரர்கள் நள்ளிரவில் சாலைகளில் இறங்கியபோது, ​​போலீசார் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக, சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். அவ்வப்போது சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. போராட்டங்கள் தீவிரமடைந்ததைத்தொடர்ந்து, ஹைதராபாத்தின் பழைய நகரில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகளைப்பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும்; நகர மக்கள் ஒத்துழைக்கவேண்டும் எனவும் போலீசார் தரப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் மெஹ்மூத் அலி, 'அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு சமரசமற்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசி கலவரத்தை ஏற்படுத்த நினைத்தால், பொறுத்துக்கொள்ள முடியாது. ராஜாசிங் மீதான புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தில் சாதி, மதம், இனம் உள்ளிட்ட எந்த பேதமும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப்பேசி வீடியோ வெளியிட்டப்புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை, தெலங்கானா மாநில பாஜக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை வீடியோ... கைதான பாஜக எம்எல்ஏ ராஜா சிங்... கட்சியில் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.